நாளைய உலகம்

Thursday, September 11, 2008

மீண்டும் துளிர்க்கும்



மௌனமே வாழ்க்கையாக
வார்த்தைகள் இன்றி
நிசப்தத்தில் கரைகிறது
வாழ்க்கை


சிரிப்பை தொலைத்த முகங்கள்
சத்தமின்றி அழுதிடும் விழிகள்
இடிந்த கட்டிடங்கள்
உடைந்த மனங்கள்
பறவைகள் கூட
மௌனம் காக்கின்றன
ஆனால்
மனங்கள் மட்டும்
எப்போதும் எதையோ தேடியபடி!


தொலைந்துபோன வாழ்க்கையையா?
இல்லை
மலரப்போகும் வசந்தத்தையா?
எதை தேடுகின்றன?
அந்த இனிய வசந்தத்தை
கோரப்பற்களாலும்
அசுர கால்களாலும்
அழித்து சிதைத்த
அரக்கர்களையா?
எதை தேடுகின்றன
எப்போதும் எதையோ தேடியபடி!


ஏல்லாமே முடிந்துபோக
பரிதியும் மதியும்மட்டும்
அடிக்கடி வந்து வேவுபார்க்கின்றன.


ஆனாலும்
ஒரு நம்பிக்கை
இலையுதிர் காலத்தில்
இழந்து நிற்கும் மரங்களெல்லாம்
மீண்டும் துளிர்ப்புக்காய்
காத்திருப்பதுபோல
நாமும்.

posted by சாந்தினி வரதராஜன் at 5:00 PM

0 Comments:

Post a Comment

<< Home