நாளைய உலகம்

Thursday, September 11, 2008

உறங்கா நிலையில் இங்கும் முதலைகள்


என்னையே பார்த்துக் கொண்டிருந்த வானம்
எப்போதும்
வெடித்து சிதறலாம்
எண்ணி எண்ணி களைத்த நட்சத்திரங்களும்
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து விழலாம்.
இப்போதெல்லாம் என் கண்களும் மூளையும்
எல்லாவற்றையும் பரிசோதித்தபடிதான்
திடீர் திருப்பங்களை சந்திக்க
என் கால்களும் தயங்குகின்றன
சிலந்திகளோ வலைகளை பின்னியபடி
காத்துக்கிடக்கின்றன
பல்லிகளும் சிலந்திகளுக்காய்
தவம் கிடக்கின்றன
எதாவது இரைகிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
எல்லா முகங்களும் வாய்களை
மூடுவதே இல்லை
புலம் பெயர்ந்த மண்ணிலும்.



posted by சாந்தினி வரதராஜன் at 5:15 PM

0 Comments:

Post a Comment

<< Home