நாளைய உலகம்

Thursday, September 11, 2008

இழப்பின் இருப்பு



உதிர்ந்த சிறகுகளை
என்னால்
சேகரிக்க முடியவில்லை
மறுபடியும் முளைக்கும்
என்ற நம்பிக்கையும்
உயிரிழந்து நிற்கின்றது.
என்னிலிருந்து உதிர்ந்த
வார்த்தைகளும்
காற்றின் கால்களுக்கிடையில்
சிக்கி தவிக்கின்றது
உதிர்ந்த வார்த்தைகளைவிட
மௌனமாக விழுங்கப்பட்டவைகள்
ஏராளம் ஏராளம்
அத்தனையும் ஒரு கலவையாகி
இருண்ட வெளியில்
ஒரு புள்ளியாய்
விழுந்து கிடக்கின்றது
ஒரு நட்சத்திர ஒளி சிதறி
பரவும்
பொழுதுக்காய்.
posted by சாந்தினி வரதராஜன் at 5:26 PM

0 Comments:

Post a Comment

<< Home